/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய ஒருமைப்பாட்டு முகாம்; சிக்கண்ணா மாணவர் பங்கேற்பு
/
தேசிய ஒருமைப்பாட்டு முகாம்; சிக்கண்ணா மாணவர் பங்கேற்பு
தேசிய ஒருமைப்பாட்டு முகாம்; சிக்கண்ணா மாணவர் பங்கேற்பு
தேசிய ஒருமைப்பாட்டு முகாம்; சிக்கண்ணா மாணவர் பங்கேற்பு
ADDED : மே 03, 2025 04:43 AM

திருப்பூர்; நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில், கர்நாடகாவில் நடக்கும் தேசிய ஒருமைப்பாட்டு முகாமுக்கு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், கர்நாடக மாநில நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், இன்று துவங்கி வரும், 9ம் தேதி வரை கர்நாடகா மாநிலம், சிவமோகா, கூவெம்பு பல்கலையில், தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நடக்கிறது.
புதுச்சேரி, கேரளா, ஆந்திரா உட்பட நாட்டின் ஆறு மாநிலங்களில் இருந்து, 150 மாணவ, மாணவியர் இம்முகாமில் பங்கேற்கின்றனர். தமிழக மாணவர் பட்டியலில், கோவை பாரதியார் பல்கலை தரப்பில், 10 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி விலங்கியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர், ஜெயச்சந்திரன் இடம் பெற்றுள்ளார்.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் உள்ளிட்ட கல்லுாரி பேராசிரியர்கள் மாணவர் ஜெயச்சந்திரனை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.