ADDED : மார் 01, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் அறிக்கை:
திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், ஆர்.வி.ஈ., நகர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட ஜெய்நகர் (003) பகிர்மானத்தில் இருந்து, எம்.சி., நகர் (008) என்ற புதிய பகிர்மானம் உருவாக்கி, மின்கட்டணம் கணக்கீடு செய்யப்பட உள்ளது.
மார்ச், 2024 முதல் மாற்றம் செய்யப்படுவதால், மணியகாரம்பாளையம் மெயின் ரோடு வேல் ஜெராக்ஸ் வரை கிழக்குப்பகுதி, எம்.சி., நகர் ஒன்று முதல், 2 வீதிகள், காமாட்சி நகர் 1 முதல், 3 வீதி, விஷ்ணுப்பிரியா கார்டன் வரையுள்ள பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர், இனிவரும் நாட்களில், மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் புதிய மின் இணைப்பு எண்களை பயன்படுத்த வேண்டும்.
புதிய மின் கட்டண அட்டைகளை, அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

