sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரயில்வே ஸ்டேஷனில் புதிய எஸ்கலேட்டர் 

/

ரயில்வே ஸ்டேஷனில் புதிய எஸ்கலேட்டர் 

ரயில்வே ஸ்டேஷனில் புதிய எஸ்கலேட்டர் 

ரயில்வே ஸ்டேஷனில் புதிய எஸ்கலேட்டர் 


ADDED : ஜன 28, 2025 04:57 AM

Google News

ADDED : ஜன 28, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : ரயில் பயணிகள் வசதிக்காக ரயில்வே ஸ்டேஷன் இரண்டாவது பிளாட்பார்மில் புதிய எஸ்கலேட்டர் நிறுவும் பணி நடந்து வருகிறது.

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பார்மில் காத்திருப்பு அறை அருகே எஸ்கலேட்டர் ஒன்று உள்ளது. 2வது பிளாட்பார்மில், குறிப்பாக, ஈரோடு, சேலம் மார்க்கமாக செல்லும் ரயில்களில் அதிகளவு பயணிகள் பயணிப்பதால், இரண்டாவது பிளாட்பார்மில் ஒரு எஸ்கலேட்டர் நிறுவும் பணி துவங்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஸ்டேஷன் வெளிவளாகம், டூவீலர் ஸ்டாண்ட் அருகே இருந்து நேரடியாக ஸ்டேஷனுக்குள் வரும் வகையில் இந்த எஸ்கலேட்டர் நிறுவப்பட்டு வருகிறது.

ரயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'ரயில்வே ஸ்டேஷனுக்குள் பலரும் வேகமாக வருகின்றனர். நுழைவு வாயில்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டாலும், ஒரு பிளாட்பார்மில் இருந்து மற்றொரு பிளாட்பார்முக்கு எளிதாக பயணிகள் சென்று சேருவது முக்கியம்; அப்போது தான் கூட்டம் ஓரிடத்தில் சேராது. சிரமம் இருக்காது.

ரயில் விட்டு இறங்கி, வெளியேறும் போது பலரும் வேகம் காட்டுவதில்லை. ரயில் பிடிக்கும் அவசரத்தில் தான் முந்துகின்றனர்.

இதனால், தற்போது நிறுவப்படும் எஸ்கலேட்டரும் மேல்நோக்கி பயணிகளை அழைத்துச் செல்லும் வகையில் கட்டமைக்கப்படுகிறது. மார்ச் மாதத்துக்குள் எஸ்கலேட்டர் பணி நிறைவு பெற்று, செயல்பாட்டுக்கு வரும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us