/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்டண உயர்வு வழங்கவில்லை; பவர்டேபிள் சங்கம் 'ஸ்டிரகை்'
/
கட்டண உயர்வு வழங்கவில்லை; பவர்டேபிள் சங்கம் 'ஸ்டிரகை்'
கட்டண உயர்வு வழங்கவில்லை; பவர்டேபிள் சங்கம் 'ஸ்டிரகை்'
கட்டண உயர்வு வழங்கவில்லை; பவர்டேபிள் சங்கம் 'ஸ்டிரகை்'
ADDED : நவ 14, 2024 11:28 PM
திருப்பூர் ; கடந்த 2022ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி, நடப்பாண்டு ஜூன் மாதம் முதல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பவர்டேபிள் நிறுவனங்களுக்கு நடைமுறையிலிருந்து 7 சதவீதம் கட்டண உயர்வு வழங்கவேண்டும்.
மற்ற அனைத்து நிறுவனங்களும் கட்டண உயர்வு வழங்கியநிலையில், திருப்பூர் - காங்கயம் ரோட்டிலுள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனம் மட்டும், பவர்டேபிள் நிறுவனங்களுக்கு கட்டண உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.
இதனால், அந்நிறுவனத்துக்கு மட்டும் ஆடை தைத்துக்கொடுப்பதை நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட பவர்டேபிள் உரிமையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதையொட்டி, பவர்டேபிள் சங்க செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. சங்க தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார்.
செயலாளர் முருகேசன், பொருளாளர் சுந்தரம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
'திருப்பூர் - காங்கயம் ரோட்டிலுள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனம், கடந்த ஜூன் 6ம் தேதி முதலான பவர்டேபிள் ஏழு சதவீத கட்டண உயர்வை வழங்க மறுத்துவருகிறது. பல கட்ட பேச்சு நடத்தியும் பயனில்லை.
எனவே, 18ம் தேதி முதல், அந்த ஒரு பின்னலாடை நிறுவனத்துக்கான ஆடை தயாரிப்பு மட்டும் நிறுத்தப்படுகிறது. கட்டண உயர்வு வழங்கும் வரை, உற்பத்தி நிறுத்தம் தொடரும்,' என, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கயம் ரோட்டிலுள்ள பின்னலாடை நிறுவனத்துக்கு ஆடை தைத்துக்கொடுக்கும், 300 பவர்டேபிள் நிறுவனங்களும் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. ஆடை தைப்பது, தயாரித்த ஆடைகளை வழங்குவது, ஆடை தைப்பதற்கான துணிக்கட்டு, எடுப்பது அனைத்தும் நிறுத்தப்படுகிறது, என பவர்டேபிள் சங்கத்தினர் தெரிவித்தனர்.