ADDED : அக் 23, 2025 11:00 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை புதிய பஸ் ஸ்டாண்டில், கூடுதல் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலையில் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் பழநி நோக்கி செல்லும் புறநகர் பஸ்களும், கிழக்கு பகுதிக்கு செல்லும் டவுன்பஸ்கள் வந்து செல்கின்றன.
இங்கு பயணியருக்கு போதிய இருக்கை இல்லாததால், பயணியர் நீண்ட நேரம் நிற்க வேண்டியதுள்ளது. எனவே கூடுதல் இருக்கைகள் அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
