sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாநில நெடுஞ்சாலை ஆணையம் வேண்டாம்...

/

மாநில நெடுஞ்சாலை ஆணையம் வேண்டாம்...

மாநில நெடுஞ்சாலை ஆணையம் வேண்டாம்...

மாநில நெடுஞ்சாலை ஆணையம் வேண்டாம்...


ADDED : ஏப் 02, 2025 07:19 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 07:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்த அரசாணையை எரிக்கும் போராட்டம் நடந்தது.

சாலைப்பணியாளர்களின், 41 மாத பணிநீக்க காலத்தை, கோர்ட் உத்தரவுப்படி, பணிநாளாக ஏற்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும், அரசாணை, 140-ஐ ரத்து செய்ய வேண்டும்.

மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள, 210 சுங்கச்சாவடி அமைத்து, சுங்கவரி வசூல் கொள்ளை நடத்த அனுமதிக்க மாட்டோம். காலிப்பணியிடங்களை ஒழிக்காமல், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மக்கள் சேவை துறையாகிய நெடுஞ்சாலைத்துறையை காக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி சாலைப்பணியாளர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கை நாளான நேற்று, மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்த அரசாணை எரிக்கும் போராட்டம் நடந்தது.

கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு, சங்க நிர்வாகிகள் வெங்கிடுபதி, கருப்பன், செவந்திலிங்கம், செங்கோட்டையன் தலைமை வகித்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், போராட்டத்தை விளக்கி பேசினர். தொடர்ந்து, அரசாணை நகலை எரிக்க முற்பட்டனர். அதனை போலீசார் பறித்து, சென்றனர்.






      Dinamalar
      Follow us