sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வடக்கு அலுவலகம் தடுமாற்றம்; ஒரேயொரு ஆய்வாளர் இருந்தால் போதுமா? ஆர்.டி.ஓ., இல்லை; தாமதமாகும் பணிகள்

/

வடக்கு அலுவலகம் தடுமாற்றம்; ஒரேயொரு ஆய்வாளர் இருந்தால் போதுமா? ஆர்.டி.ஓ., இல்லை; தாமதமாகும் பணிகள்

வடக்கு அலுவலகம் தடுமாற்றம்; ஒரேயொரு ஆய்வாளர் இருந்தால் போதுமா? ஆர்.டி.ஓ., இல்லை; தாமதமாகும் பணிகள்

வடக்கு அலுவலகம் தடுமாற்றம்; ஒரேயொரு ஆய்வாளர் இருந்தால் போதுமா? ஆர்.டி.ஓ., இல்லை; தாமதமாகும் பணிகள்


ADDED : மே 01, 2025 04:21 AM

Google News

ADDED : மே 01, 2025 04:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆர்.டி.ஓ., இல்லாமல், ஒன்றரை மாதமாக தடுமாறி வருகிறது. ஒரே ஆய்வாளர் மட்டும் பணியில் உள்ளதால், பணிகள் தாமதமாகின்றன.

திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றி வந்த ஜெயதேவராஜ், தர்மபுரி ஆர்.டி.ஓ.,வாக பணி மாறுதல் பெற்று, மார்ச் மாதம் சென்றார். ஆய்வாளர் பணியில் இருந்த பாஸ்கர் பணி உயர்வு பெற்று, உடுமலை ஆர்.டி.ஓ.,வாக பொறுப்பேற்றார். மற்றொரு ஆய்வாளர் உடல்நிலை காரணமாக தொடர் விடுப்பில் உள்ளார்.

பணி முடிக்க2, 3 நாளாகிறது


ஆர்.டி.ஓ., - மூன்று ஆய்வாளருடன் செயல்பட்டு வந்த வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்போது ஒரு ஆய்வாளர் மட்டுமே உள்ளார். தெற்கு ஆர்.டி.ஓ., வெங்கிடுபதிக்கு கூடுதல் பொறுப்பாக வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது. இருக்கும் ஒரு ஆய்வாளருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ள நிலையில், வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தை நாடி வருவோருக்கு நடவடிக்கைகளை முடித்துக் கொடுத்து அனுப்பி வைக்க, இரண்டு முதல் மூன்று நாட்களாகிறது.

கண்காணிப்பு சிக்கல்


ஒரே ஆய்வாளரே புதிய வாகன பதிவு எண் வழங்குவது, அலுவலக கோப்புகளை பார்வையிடுவது மற்றும் வாகன பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பொறுப்பு ஆர்.டி.ஓ., வெங்கிடுபதி வாரம் இருமுறை மட்டுமே வருவதால், பிற அலுவலர், ஊழியர் பணிகளை கண்காணிக்க இயலவில்லை.

காலியிடம் நிரப்பப்படுமா?


வட்டார போக்குவரத்து துறையினர் கூறுகையில், 'மாநிலம் முழுதும் காலியாக உள்ள ஆர்.டி.ஓ., ஆய்வாளர் பணியிடங்கள் குறித்த பட்டியலில் இருமுறை திருப்பூரின் விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் இடங்கள் நிரப்பப்படும் போது, திருப்பூருக்கான இடமும் நிரப்ப வாய்ப்புள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us