sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வட மாநில சிறுவன் கொலை; மில் தொழிலாளி கைது

/

வட மாநில சிறுவன் கொலை; மில் தொழிலாளி கைது

வட மாநில சிறுவன் கொலை; மில் தொழிலாளி கைது

வட மாநில சிறுவன் கொலை; மில் தொழிலாளி கைது


ADDED : நவ 14, 2024 11:34 PM

Google News

ADDED : நவ 14, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுந்தர் கோச்சாவின் மகன் கணேஷ் 5. காரணம்பேட்டையில் உள்ள தனியார் மில் ஒன்றில் தங்கி வேலை பார்க்கிறார். கடந்த, 6ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கணேஷ், திடீரென மாயமானார்.

இதுகுறித்து சுந்தர் மனைவி பீலா கோச்சா அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த பல்லடம் போலீசார், மறுநாள், வீட்டின் அருகே உள்ள புதரில், கணேஷை சடலமாக மீட்டனர். விசாரணையில், நேற்று கண்டூர்தாஸ் மகன் கண்ணுதாஸ் 31 என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், 'பீலா கோச்சாவுக்கு, இரண்டு கணவர்கள் உள்ளனர். மகனுடன் காரணம்பேட்டையில் வசித்து வரும் இவருக்கு மற்றொருவருடன் தொடர்பு ஏற்பட்டது.

இது, பீலாவுடன் பழகி வந்த கண்ணுதாஸூக்கு பிடிக்கவில்லை. இதற்காக பழி வாங்கும் நோக்கில், சிறுவன் கணேஷை மூச்சு திணற வைத்து கொலை செய்து புதருக்குள் வீசியுள்ளார். விசாரணையில் இதனை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us