ADDED : பிப் 19, 2026 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி என்.எஸ்.எஸ். சார்பில், 'எங்களுக்காக அல்ல; உங்களுக்காக' என்ற தலைப்பில் கேத்தனுார் பகுதியில் சிறப்பு முகாமை நடத்தின.
நிறைவு நாள் நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் வசந்தி வரவேற்றார். முகாம் அறிக்கையை பேராசிரியை கோமதி வாசித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் ஹரிகோபால், ஆசிரியர் மணிவண்ணன், இயற்கை விவசாயி பழனிசாமி, பாரதியார் பல்கலை என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, கூட்டுறவு சார்-பதிவாளர் கார்த்திகை செல்வி பேசினர்.
பொங்கலுார் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல், கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. திட்ட அலுவலர் நிர்மலா தேவி நன்றி கூறினார்.

