sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பட்டு வளர்ச்சித்துறைக்கு தேவை அலுவலகம்: உடுமலையில் அமைய எதிர்பார்ப்பு

/

பட்டு வளர்ச்சித்துறைக்கு தேவை அலுவலகம்: உடுமலையில் அமைய எதிர்பார்ப்பு

பட்டு வளர்ச்சித்துறைக்கு தேவை அலுவலகம்: உடுமலையில் அமைய எதிர்பார்ப்பு

பட்டு வளர்ச்சித்துறைக்கு தேவை அலுவலகம்: உடுமலையில் அமைய எதிர்பார்ப்பு


ADDED : பிப் 16, 2024 11:35 PM

Google News

ADDED : பிப் 16, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைந்துள்ள வளாகத்தில், பட்டு வளர்ச்சித்துறைக்கு நிரந்தர கட்டடம் ஒதுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில், வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில், உடுமலை பகுதி முன்னிலையில் உள்ளது. புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி, தரமான வெண்பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்வதால், கொள்முதல் மையங்களிலும் இப்பகுதி கூடுகளுக்கு தனியிடம் கிடைக்கிறது.

இத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்காக, மாநில அரசின் பட்டுவளர்ச்சித்துறை சார்பில், மானியத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

அதே போல், மத்திய அரசின், மத்திய பட்டு வாரிய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் கீழ், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு துறைகளுக்கும், உடுமலையில் நிரந்தர கட்டடம் இல்லை.

குறிப்பாக, பட்டு வளர்ச்சி துறைக்கு தனியாக அலுவலக கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. தற்போது, மடத்துக்குளம் தாலுகா மைவாடியில், பட்டு வளர்ச்சி துறை அலுவலகம் இயங்கி வருகிறது.

இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகள், மைவாடிக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.

உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டது. அதில், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, விதை சான்று உட்பட துறைகளுக்கு தனியாக அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால், அதிக விவசாயிகள் வந்து செல்லும் பட்டு வளர்ச்சி துறைக்கும், வேளாண் பொறியியல் துறைக்கும் இடம் ஒதுக்கப்படவில்லை.

போதிய இடவசதி உள்ள நிலையில், விவசாயிகள் தேவைக்காக அப்பகுதியிலேயே பட்டு வளர்ச்சித்துறைக்கு கட்டடம் கட்ட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us