sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துப்புரவு காவலர் குடியிருப்பு சீரமைக்க அதிகாரிகள் முடிவு

/

துப்புரவு காவலர் குடியிருப்பு சீரமைக்க அதிகாரிகள் முடிவு

துப்புரவு காவலர் குடியிருப்பு சீரமைக்க அதிகாரிகள் முடிவு

துப்புரவு காவலர் குடியிருப்பு சீரமைக்க அதிகாரிகள் முடிவு


ADDED : நவ 09, 2024 07:10 AM

Google News

ADDED : நவ 09, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் ; பல்லடம் அடுத்த கரைப்புதுார் கிராமத்தில் வசிப்பவர் சின்னப்பன், 86; கரைப்புதுார் ஊராட்சியில், 30 ஆண்டுகளாக துப்புரவு காவலராக வேலை பார்த்து ஓய்வு பெற்றார். மனைவி, மகள் காலமான நிலையில், அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். வருவாய் இன்றி, உணவுக்கும் கையேந்தும் நிலையில் வாழ்ந்து வருகிறார். இவரது நிலை குறித்து, 'தினமலர்' நாளிதழ் திருப்பூர் பதிப்பில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.

இதனால், சின்னப்பன் வசிக்கும் குடியிருப்பில், பல்லடம் பி.டி.ஓ., கனகராஜ் மற்றும் அதிகாரிகள், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆர்.ஆர்.ஹெச்., திட்டத்தின் கீழ், 1.50 லட்சம் ரூபாய் செலவில், குடியிருப்பை பழுது பார்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

'தினமலர்' செய்தியை தொடர்ந்து, சின்னப்பனின் சேதமடைந்த குடியிருப்புக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதேபோல், அவரது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பு.






      Dinamalar
      Follow us