sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பிரதான ரோடுகளில் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு விதி மீறல்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

/

பிரதான ரோடுகளில் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு விதி மீறல்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பிரதான ரோடுகளில் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு விதி மீறல்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பிரதான ரோடுகளில் பிளக்ஸ் பேனர்கள் அதிகரிப்பு விதி மீறல்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள்


ADDED : அக் 14, 2025 01:12 AM

Google News

ADDED : அக் 14, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலையில், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பிரதான ரோடுகளில், விதி மீறி அதிகளவு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுவதால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

உடுமலை நகரப்பகுதிகளில், ரோடு சந்திப்புகள், பஸ் ஸ்டாண்ட், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதி, பஸ் ஸ்டாப்கள் என அனைத்துப்பகுதிகளிலும், அரசியல் கட்சிகள், வணிக நிறுவனங்கள் சார்பில், நுாற்றுக்கணக்கான பேனர்கள் நிறுவப்பட்டுள்ளன.

பிரதான ரோடுகளான, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு மற்றும் தளி ரோடு சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட், அனுஷம் ரோடு சந்திப்பு என அனைத்து இடங்களிலும், பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

பொது இடங்களில், பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என, அரசு மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையிலும், விதி மீறி, இவ்வாறு அமைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால், கவனச்சிதறல், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

பெரும்பாலான பகுதிகளில், பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப் மற்றும் ரோடுகளை மறைத்து வைத்துள்ளதால், பொதுமக்கள் பாதிக்கின்றனர்.

பல இடங்களில் மழைக்கும், காற்றுக்கு தாங்காமல், வாகன ஓட்டுனர்கள் மீது விழுந்து விபத்துக்களையும் ஏற்படுத்தி வருகிறது.

எனவே, நகர பகுதிகளில், விதி மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றவும், அவற்றை வைத்தவர்கள் மீதும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல் மடத்துக்குளம் நால்ரோடு, அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட் மற்றும் குமரலிங்கம் ரோடு, தாராபுரம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு பகுதிகளிலும், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகளவு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இவற்றையும் அகற்றவும், விதி மீறி பிளக்ஸ்பேனர்கள் அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பேரூராட்சி, வருவாய்த்துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us