/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாராயம் காய்ச்சிய மூதாட்டி கைது
/
சாராயம் காய்ச்சிய மூதாட்டி கைது
ADDED : அக் 06, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : காங்கயத்தில் சாராயம் காய்ச்சிய மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
காங்கயம், ஆலம்பாடியில் கள்ள சாராயம் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து மேற்கொண்ட காங்கயம் போலீசார், நல்லிகவுண்டம்வலசுவில் சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ருக்மணி, 65 என்ற மூதாட்டியை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு லிட்டர் சாராயம், 20 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்யப்பட்டது.