sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவில்களில் ஓணம் பண்டிகை : மனங்கவர்ந்த அத்தப்பூ கோலம்

/

கோவில்களில் ஓணம் பண்டிகை : மனங்கவர்ந்த அத்தப்பூ கோலம்

கோவில்களில் ஓணம் பண்டிகை : மனங்கவர்ந்த அத்தப்பூ கோலம்

கோவில்களில் ஓணம் பண்டிகை : மனங்கவர்ந்த அத்தப்பூ கோலம்


ADDED : செப் 05, 2025 11:38 PM

Google News

ADDED : செப் 05, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:

மலர்களால், அத்தப்பூ கோலமிட்டு, கோவில்களில் ஓணம் பண்டிகை கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது.

திருப்பூர் பகுதியில் மலையாள மக்கள் நீண்ட நாட்களாக வசித்து வருகின்றனர். ஓணம் பண்டிகை பாரம்பரிய விழா என்பதால், பெரும்பாலானோர், கேரளா சென்று கொண்டாடி வருகின்றனர்; சிலர், திருப்பூரிலேயே கொண்டாட துவங்கிவிட்டனர். கேரள மக்கள் அதிகம் வழிபாடு நடத்தும் கோவில்களில், நேற்று ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் நடந்தன. அவ்வகையில், ஊத்துக்குளி ரோடு, குருவாயூரப்பன் கோவிலில், சுவாமிக்கு அதிகாலையில் அபிேஷக பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து, தங்ககவச அலங்காரத்துடன் குருவாயூரப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள், கோவில் வளாகத்தில், பல்வகை மலர்களால் அத்தப்பூ கோலம் அமைத்து, தீபம் ஏற்றி வைத்து வழிபட்டனர். திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில், காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது; அத்தப்பூ கோலமிட்டும், தீபம் ஏற்றி வைத்தும் வழிபட்டனர். கேரள பாரம்பரிய உடையணிந்து, வீடு மற்றும் கோவில்களில் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.






      Dinamalar
      Follow us