sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆன்லைன் மோசடி; கேரளாவில் 3 பேர் 'வளைப்பு'

/

ஆன்லைன் மோசடி; கேரளாவில் 3 பேர் 'வளைப்பு'

ஆன்லைன் மோசடி; கேரளாவில் 3 பேர் 'வளைப்பு'

ஆன்லைன் மோசடி; கேரளாவில் 3 பேர் 'வளைப்பு'


ADDED : அக் 19, 2024 12:39 AM

Google News

ADDED : அக் 19, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரை சேர்ந்தவரிடம் ரூ.5 லட்சம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது வாட்ஸ் ஆப் செயலியில், வந்த ஒரு இணைப்பில், கூகுள் மேப் ரிவியூ ஜாப் என்பதில் இணைந்து முதலீடு செய்தால் ஏராளமாக பணம் வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் அவர் முதல் கட்டமாக முதலீடு செய்து பணம் பெற்றார். மேலும் அடுத்த நிலைக்குச் செல்ல டெலிகிராம் செயலியில் வந்த இணைப்பில் 5 லட்சம் ரூபாய் செலுத்தினார். அதன் பின் எந்த பணமும் வரவில்லை. அவர் செலுத்திய பணமும் பறிபோனது.

திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பல் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருப்பது தெரிந்தது.

அங்கு சென்ற போலீசார் சித்திக்குள் அக்பர், 21; மிதுன் மோகனன், 27, உமர் ஜமால், 29 ஆகியோரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us