ADDED : ஏப் 18, 2025 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஊத்துக்குளி, நடுப்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகரன், 49. பல்லகவுண்டன்பாளையத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில், மெல்டிங் பிரிவில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று அதிகாலை ஷிப்டிற்கு வந்த அவர் கிரேன் இயக்கும் போது, கிரேனில் பொருத்தப்பட்டுள்ள மேக்னட்டை கீழே இறக்காமல், தொங்கவிட்டபடியே கீழே இறங்கி வந்துள்ளார்.
எடை தாங்காமல் மேக்னட் நகர்ந்து வர, அதில் சிக்கிய சந்திரசேகரன் காயமடைந்தார். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.