நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் படியூர் கிளை சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஒன்றிய செயலாளர் கீதா தலைமை வகித்தார். காஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டதை கண்டித்து, சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. மாதர் சம்மேளன திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் நதியா உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.