sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பசுமை இலக்கைத் தாண்ட வாய்ப்பு

/

பசுமை இலக்கைத் தாண்ட வாய்ப்பு

பசுமை இலக்கைத் தாண்ட வாய்ப்பு

பசுமை இலக்கைத் தாண்ட வாய்ப்பு


ADDED : அக் 03, 2025 10:51 PM

Google News

ADDED : அக் 03, 2025 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:

'வனத்துக்குள் திருப்பூர்-11' திட்டத்தில், கன்னிவாடி பேரூராட்சி அருகே, நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டம், நடப்பு ஆண்டில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன் பணிகள் துவங்கியது; நேற்றுடன் இரண்டு லட்சத்தை கடந்து, பசுமைப்பணி புயல் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

''வடகிழக்கு பருவம் துவங்கியுள்ள நிலையில், மீதியுள்ள ஒரு லட்சம் மரக்கன்றுகளையும், விரைவாக நட்டு முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகப்படியான விவசாயிகள் முன்பதிவு செய்துள்ளதால், வழக்கம் போல், இலக்கை மிஞ்சிய பசுமை பயணமாகவே அமையும்'' என்கின்றனர், திட்டக்குழுவினர்.

கன்னிவாடி பேரூராட்சி பகுதிகளில், நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில், புங்கன் -100, வேம்பு -50, இலுப்பை -30, பூவரசு 20 என, 200 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

பேரூராட்சி தலைவர் ரேவதிசுரேஷ்குமார், மரக்கன்று நடவு பணியை துவக்கி வைத்தார். மாநகராட்சி பணியாளர், பசுமை ஆர்டர்கள், திட்டக்குழுவினர், மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us