sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'டயாபர்' நிறுவனத்துக்கு எதிர்ப்பு

/

'டயாபர்' நிறுவனத்துக்கு எதிர்ப்பு

'டயாபர்' நிறுவனத்துக்கு எதிர்ப்பு

'டயாபர்' நிறுவனத்துக்கு எதிர்ப்பு


ADDED : ஜன 06, 2024 12:37 AM

Google News

ADDED : ஜன 06, 2024 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;பல்லடம் தாலுகா வே.வாவிபாளையத்தில், 'டயாபர்' உற்பத்தி நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள், பொதுமக்கள், விவசாய அமைப்பினர் நுாற்றுக்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் திரண்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, விவசாயிகள், ஆர்ப் பாட்டம் நடத்தினர். 'டயாபர்' நிறுவனம் அமைய எதிர்ப்பு தெரிவித்தும், நில வகைபாடு மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

விவசாயிகள் கூறியதாவது:

வாவிபாளையத்தில், விவசாயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில், டயாபர் உற்பத்தி நிறுவனம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நிறுவனம் அமைந்தால், சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபடும்; அருகிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்படும்.

நிறுவனம் அமையும் விவசாய நிலத்தை, தவறான ஆவணங்கள் மூலம், தரிசு நிலம் என வகை மாற்றம் செய்ய முயற்சித்து வருகின்றனர். இதற்கு வேளாண்அதிகாரிகள், கலெக்டர் உட்பட வருவாய்த்துறையினர் அனுமதி அளிக்க கூடாது; வகை மாற்றத்தை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us