ADDED : டிச 20, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, 16வது வார்டு, பிச்சம்பாளையம் புதுார், துரைசாமி புரத்தில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வைக்க போதிய இடவசதி இல்லை. இதனால் ரேஷன் கடையை அருகில் உள்ள கணேசா நகருக்கு இடம் மாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான பணியில் ஈடுபட்டனர்.
துரைசாமிபுரம் பகுதி பொதுமக்கள், அப்பகுதிக்கு சென்று ரேஷன் கடை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடையை முற்றுகையிட்டனர். ரேஷன் கடை இடமாற்றத்தை அதிகாரிகள் கைவிட்டு, துரைசாமி புரத்திலே செயல்படும் என்று அறிவித்தனர். பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

