ADDED : பிப் 18, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை மாவட்ட தோட்டக்கலைதுறை அலுவலர்களுக்கு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சசிகலா, உதவி இயக்குனர் மோகனரம்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
தோட்டக்கலை துறை இயக்குனர் குமாரவேல் பேசியதாவது:
தென்னைகளில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதுகுறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.