ADDED : மார் 14, 2026 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை:
போலீசில் ஆர்டர்லி முறையை முழுமையாக அகற்றும் வகையில், மாவட்ட அளவிலான குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், கலெக்டர் தலைமையில் குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்டர்லி முறை தொடர்பாக, போலீசார், பொதுமக்கள், தபால் வாயிலாகவோ அல்லது இ-மெயில், வாட்ஸ் அப் எண்ணிலோ புகார் அளிக்கலாம்.
கலெக்டரை collrtup@nic.in என்கிற இ-மெயில், 94422-00909 என்கிற வாட்ஸ் அப் எண்; டி.ஆர்.ஓ.,வை, drotpr@gmail.com என்கிற இ-மெயில் அல்லது 94860-56546 என்கிற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு, புகார் அளிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

