/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெருநாய்களை கட்டுப்படுத்த அரசாணை அமலாகுமா?
/
தெருநாய்களை கட்டுப்படுத்த அரசாணை அமலாகுமா?
ADDED : அக் 05, 2024 03:58 AM
இதுவரையில்லாத வகையில், கிராம ஊராட்சிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், தெரு நாய்களை கட்டுப்படுத்துதல் அரசாணை எண். 202, ஊரக வளர்ச்சி (சி4) தேதி: 28.09.1999ன் படி, கிராம ஊராட்சிகளில் நாய் வளர்ப்பவர்கள், சம்மந்தப்பட்ட ஊராட்சிகளில் உரிய அனுமதி பெற்று கொள்ள தெரிவித்தும், நாய் உரிமம் பெறாத நாய்கள், ஊராட்சியின் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும், வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தீர்மானம் செயல்பாட்டுக்கு வருமா என்பதுதான் கேள்வி.