/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வித்யா மந்திர் பள்ளியில் பெற்றோருக்கு பாதபூஜை
/
வித்யா மந்திர் பள்ளியில் பெற்றோருக்கு பாதபூஜை
ADDED : பிப் 18, 2024 01:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
திருமுருகன்பூண்டி விவேகானந்த சேவாலய நிறுவனர் செந்தில்நாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குழந்தைகளுக்காக பெற்றோர் செய்யும் தியாகம் குறித்தும், பாத பூஜை செய்வதன் முக்கியத்துவம், மாணவர்கள் தாய், தந்தையரை எவ்வாறு பேணிக்காப்பாற்ற வேண்டும் என்பது குறித்தும் புராணக்கதை வாயிலாக விளக்கினார். பள்ளி தாளாளர் ஜெயந்திமாலா முன்னிலை வகித்தார்.