/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சாலைத்தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
/
பஞ்சாலைத்தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 19, 2025 08:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை, ;மத்திய, மாநில அரசுகள், ஜவுளிக்கொள்கையில் தொழிலாளர் நலன் காத்திடவும், குறைந்த பட்ச ஊதியம், இ.எஸ்.ஐ., - பி.எப்., உள்ளிட்டவற்றை உறுதி செய்யவும், தொழிலாளர் நலச்சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, சி.ஐ.டி.யு., பஞ்சாலைத்தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பழனிசாமி, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ஜெயப்பிரகாஷ், துணை தலைவர் சண்முகம், சி.ஐ.டி.யு., மாவட்ட துணை செயலாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.