sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருமூர்த்தி அணைக்கரையில் பூங்கா? கிடப்பில் போடப்பட்ட திட்டம்

/

திருமூர்த்தி அணைக்கரையில் பூங்கா? கிடப்பில் போடப்பட்ட திட்டம்

திருமூர்த்தி அணைக்கரையில் பூங்கா? கிடப்பில் போடப்பட்ட திட்டம்

திருமூர்த்தி அணைக்கரையில் பூங்கா? கிடப்பில் போடப்பட்ட திட்டம்


ADDED : மே 30, 2025 11:47 PM

Google News

ADDED : மே 30, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : திருமூர்த்திமலையில், சுற்றுலா பயணியரின் நீண்ட நாள் கோரிக்கையான பூங்கா அமைக்க, அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

உடுமலை அருகே, திருமூர்த்தி அணை, மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அமைந்துள்ளது. அணை, பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் என அப்பகுதி ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது.

இருப்பினும், சுற்றுலாப்பயணியர் பொழுதுபோக்க அப்பகுதியில், பூங்கா இல்லாதது முக்கிய பிரச்னையாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

முன்பு ஆண்டுதோறும், அரசு சார்பில் நடத்தப்படும் ஆடிப்பெருந்திருவிழாவில், உடுமலை பகுதியை சேர்ந்த மக்கள் சார்பில், திருமூர்த்தி அணையில், பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.

பூங்கா அமைப்பதற்கான இடத்தேர்வு, பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது. சாம்பல்மேடு பகுதியிலிருந்து திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாய் வரை, ஒரு ஏக்கர் நிலம் பொதுப்பணித்துறைக்கு உள்ளது.

இந்த இடத்தில் பூங்கா அமைக்க பொதுப்பணித்துறை சார்பில் திட்டமிடப்பட்டு, நீண்ட இழுபறிக்குப்பிறகு, மரங்கள் அகற்றப்பட்டன.

அப்போது, ஒரு ஏக்கரில் பூங்கா அமைக்க, பொதுப்பணித்துறை சார்பில், 85 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கருத்துரு தயாரிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன் அரசுக்கு அனுப்பப்பட்டது.

இதில், நீரூற்றுகள், சறுக்கு விளையாட்டுகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

பல ஆண்டுகளாகியும், பூங்கா அமைக்கப்படாமல், அதற்காக, மரங்கள் அகற்றப்பட்ட அணை கரை, பொலிவிழந்து பரிதாப நிலையில் காட்சியளிக்கிறது.






      Dinamalar
      Follow us