/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் மாணவர்கள் பங்கேற்பு
/
உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் மாணவர்கள் பங்கேற்பு
ADDED : செப் 30, 2024 05:30 AM
உடுமலை: உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் உயர் கல்வி சேர்க்கைக்கான உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடந்தது.
பிளஸ் 2 முடித்த, மாணவர்கள் உயர்கல்வியில் சேரும் வகையில், 'உயர்கல்வி சேர்க்கைக்கான உயர்வுக்கு படி' என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், இந்நிகழ்ச்சியினை கல்வித்துறையினர் நடத்தி வருகின்றனர்.
உடுமலை சுற்றுவட்டாரத்தில் இரண்டாம் கட்டமாக, 'உயர்வுக்கு படி உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களைச்சேர்ந்த, 29 மாணவர்கள் முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள், கல்லுாரி முதல்வர்கள் மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை குறித்து விளக்கமளித்தனர்.
இறுதியில் மூன்று மாணவர்களுக்கு உடுமலை தொழிற்பயிற்சி நிலையத்திலும், ஒரு மாணவிக்கு பாலிடெக்னிக் கல்லுாரியிலும் நேரடி சேர்க்கை வழங்கப்பட்டது. அரசால் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தினை, உயர்கல்வி சேராமல் இருக்கும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.