/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுதல் ரயில்கள் இயக்குங்க; பயணியர் வலியுறுத்தல்
/
கூடுதல் ரயில்கள் இயக்குங்க; பயணியர் வலியுறுத்தல்
ADDED : செப் 04, 2025 10:52 PM
உடுமலை; உடுமலை வழியாக, கூடுதல் ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இதன் வழியாக, கோவை - மதுரை, திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.
உடுமலையிலுள்ள தனியார் நிறுவனங்கள், கம்பெனிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணி புரிகின்றனர். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயிலை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் தற்போது செல்லும் ரயில்கள் போதுமானதாக இல்லை. இந்த ரயில்களில் அவர்கள் அமர இடமின்றியும், நெருக்கடியில் செல்லும் நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து பல முறை பயணியர் ரயில்வே துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளனர். எனவே, உடுமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.