sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புதிய அலுவலகம் மூலம் 1100 பேருக்கு பாஸ்போர்ட்

/

புதிய அலுவலகம் மூலம் 1100 பேருக்கு பாஸ்போர்ட்

புதிய அலுவலகம் மூலம் 1100 பேருக்கு பாஸ்போர்ட்

புதிய அலுவலகம் மூலம் 1100 பேருக்கு பாஸ்போர்ட்


ADDED : மார் 17, 2025 01:51 AM

Google News

ADDED : மார் 17, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூரில் துவங்கப்பட்ட பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் மூலம், கடந்த ஜன., 24 முதல் இம்மாதம் 14 வரை, 1400 பேர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில், 1100க்கும் மேற்பட்டோருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

பின்னலாடை தொழில் மூலம் அன்னியச்செலவாணி பெற்றுத்தரும் திருப்பூரில் பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் ஒரு பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ், திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கடந்த ஜன., 24ம் தேதி திறக்கப்பட்டது. ஒரு மேலாளர் தலைமையில், நான்கு பணியாளர் நியமிக்கப்பட்டனர்.

திருப்பூர் கோட்ட தபால்துறை அலுவலர்கள் கூறியதாவது:

திருப்பூரில் அலுவலகம் செயல்படுவதன் மூலம், பாஸ்போர்ட் பெற கோவை செல்ல வேண்டிய நிலை மாறியது. புதிய அலுவலகத்தில், ஜன., மாதம் - 200 பேர்; பிப்., - 800 பேர்; இம்மாதம், 14ம் தேதி வரை, 400 பேர் என மொத்தம், 1,400 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 1100க்கும் மேற்பட்டோருக்கு பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

விண்ணப்பிக்கிறீர்களா?

பாஸ்போர்ட் வேண்டுவோர், விண்ணப்பிக்க விரும்புவோர் www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள முடியும். பாஸ்போர்ட் சேவை, புதுப்பிப்பு குறித்து திருப்பூர் தபால் கோட்ட அலுவலகத்தில் செயல்படும் கேந்திரா அலுவலகத்தில், நேரிலும் விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.








      Dinamalar
      Follow us