/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 04, 2024 10:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை தாலுகா அலுவலகம் முன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு முழுமையான அகவிலைப்படி, கிராம உதவியாளர், நுாலகர், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு, குறைந்த பட்ச ஓய்வூதியம், ரூ.7,850 வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில், நிர்வாகிகள் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.