ADDED : ஜூன் 10, 2025 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
சத்துணவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வூதியமாக, 7,850 ரூபாய் வழங்க வேண்டும். இலவச மருத்துவ காப்பீடு, ஈமச்சடங்கு நிதியாக, 25 ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், பணியாளர்கள் கறுப்பு சேலை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கன்வீனர் முருகேசன் தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பிற சங்க நிர்வாகிகள் பேசினர்.