/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் நிறுவன கழிவு வேன் போலீசில் ஒப்படைத்த மக்கள்
/
பனியன் நிறுவன கழிவு வேன் போலீசில் ஒப்படைத்த மக்கள்
பனியன் நிறுவன கழிவு வேன் போலீசில் ஒப்படைத்த மக்கள்
பனியன் நிறுவன கழிவு வேன் போலீசில் ஒப்படைத்த மக்கள்
ADDED : நவ 22, 2025 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லுார் ஊராட்சி, சி.எஸ்.ஐ. சர்ச்சில் இருந்து, பால சமுத்திரம் செல்லும் வழியில் சுடுகாடு உள்ளது. நேற்று இரவு ஒரு பனியன் ஏற்றுமதி நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் உள்ள கழிவுகளை வேனில் கொண்டு வந்து கொட்டினர்.
தொடர்ந்து தீ வைத்துள்ளனர். அதனை அறிந்த காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை செயலாளர் குமார் மற்றும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற செயலருக்கு தகவல் தெரிவித்து, வாகனத்தை பிடித்து பெருமாநல்லுார் போலீசில் ஒப்படைத்தனர்.
பெருமாநல்லுார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

