ADDED : பிப் 05, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
உடுமலை: மடத்துக்குளம் நால்ரோட்டில் ரவுண்டானா அமைக்க, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமைந்துள்ளது. இதன் வழியாக கோவை, பாலக்காடு, ஊட்டியிலிருந்து, பழநி, திண்டுக்கல், தென்மாவட்ட நகரங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மடத்துக்குளத்திலுள்ள நால்ரோட்டில் கணியூர் ரோடு, குமரலிங் கம் ரோடும் சந்திக்கின்றன. டவுன்பஸ்கள், பிற வாகனங்கள் இங்கு வந்து செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, மடத்துக்குளம் நால்ரோட்டில் ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
