/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்திமலை கோவில் அருவிக்கு செல்ல அனுமதி
/
திருமூர்த்திமலை கோவில் அருவிக்கு செல்ல அனுமதி
ADDED : டிச 19, 2025 06:58 AM

உடுமலை: திருமூர்த்திமலை கோவில், பஞ்சலிங்கம் அருவியில் நீர்வரத்து சீரானதால், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டனர்.
திருமூர்த்திமலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில் அமைந்துள்ள, அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்ததால், நேற்று முன்தினம் கோவில் மற்றும் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மழை குறைந்து நீர் வரத்து சீரானதால், அமணலிங்கேஸ்வரர் கோவிலில், வழக்கமான பூஜைகளும், பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கும் அனுமதிக்கப்பட்டனர்.
அதே போல், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியிலும், நீர்வரத்து குறைந்து, சீராக நீர் விழுந்தது. இதனால், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அருவிக்கும் அனுமதிக்கப்பட்டனர்.

