sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மதுக்கடை மூடக்கோரி மனு

/

மதுக்கடை மூடக்கோரி மனு

மதுக்கடை மூடக்கோரி மனு

மதுக்கடை மூடக்கோரி மனு


ADDED : பிப் 01, 2025 12:22 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்; இ.கம்யூ., கட்சியின் திருப்பூர் இரண்டாவது மண்டல குழு செயலாளர் சசிகுமார், மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்செல்வி, ஆகியோர் டாஸ்மாக் மாவட்ட மேலாளரை சந்தித்து அளித்த மனு:

கொங்கு மெயின் ரோடு இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகில் ரங்கநாத புரம் இரண்டாவது வீதியில் டாஸ்மாக் மதுக்கடை (எண்: 1909) பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மது கடையால், பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மதுக்கடை இரவு - பகல் எந்த நேரமும் செயல்பட்டு வருகிறது.

மது அருந்த வருபவர்கள் தங்கள் வாகனங்களை ரோட்டின் இரு பக்கமும் நிறுத்தி கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். போதை ஆசாமிகளின் அட்டகாசத்தால் மாணவர்கள் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குடியிருக்கவே மக்கள் அச்சப்படுகின்றனர்.

மக்களின் நலன் கருதி மதுக்கடையை உடனடியாக இடமாற்றம் செய்து, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும், அப்பகுதி பொது மக்களுக்கும், அமைதியான வாழ்க்கைக்கான உத்தரவாதத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.

கடையை இடமாற்றம் செய்ய காலதாமதம் செய்தால் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்துவோம்.






      Dinamalar
      Follow us