/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு
/
வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு
ADDED : ஜூலை 27, 2025 09:01 PM

உடுமலை; மடத்துக்குளம் தாலுகாவில், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி, தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது.
மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி, கடந்தாண்டு மனு அளித்தனர்.
ஒரு ஆண்டாகியும் விசாரணை மேற்கொள்ளாமலும், அரசுக்கு சொந்தமான நிலம் இருந்தும், பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், ஐக்கிய கம்யூ., சார்பில், மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். தொடர்ந்து, தாசில்தாரிடம் மனு அளித்த, பொதுமக்கள், உடனடியாக தீர்வு காணாவிட்டால், தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.