sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வளைவில் குழி; விழுந்தால் வலி!

/

வளைவில் குழி; விழுந்தால் வலி!

வளைவில் குழி; விழுந்தால் வலி!

வளைவில் குழி; விழுந்தால் வலி!


ADDED : ஜன 29, 2024 12:02 AM

Google News

ADDED : ஜன 29, 2024 12:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக்கிரமிப்பு

திருப்பூர், காங்கயம் ரோடு, சி.டி.சி., டிப்போ துவங்கி, வேலன் ஓட்டல் ஸ்டாப் வரை நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

- சபீஸ், காங்கயம் ரோடு.

ஆபத்து

திருப்பூர், துரைசாமிபுரம் முதல் வீதியில் மின்கம்பிகளுக்கு நடுவே, மரக்கிளைகள் பயணிக்கின்றன. மின்விபத்து அபாயம் உள்ளதால், மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

- சாந்தி, துரைசாமிபுரம். (படம் உண்டு)

தடுமாற்றம்

திருப்பூர் எஸ்.வி., காலனி மெயின் ரோட்டில் மின்கம்பம் மாற்ற குழி தோண்டப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளது. வளைவில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.

- தீனா, எஸ்.வி., காலனி. (படம் உண்டு)

இருள்மயம்

திருப்பூர் வடக்கு, குருவாயூரப்பன் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில், தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.

- ஜெயகணேஷ், குருவாயூரப்பன் நகர். (படம் உண்டு)

'ஆறு'

திருப்பூர், கல்லாங்காடு மெயின் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் ஆறு போல் வழிந்தோடுகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- கார்த்திகேயன், கல்லாங்காடு. (படம் உண்டு)

சேதம்

திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, காமராஜர் ரோட்டில் குழாய் உடைந்து, தண்ணீர் சாலையில் வீணாகிறது. சாலை சேதமாகிறது.

- சங்கர் சதீஷ், காமராஜர் ரோடு. (படம் உண்டு)

தொல்லை

திருப்பூர், 23வது வார்டு, வ.உ.சி., நகர் 4வது வீதியில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.

- ராம்குமார், வ.உ.சி., நகர். (படம் உண்டு)

ரியாக் ஷன்

அகற்றம்

திருப்பூர், போயம்பாளையம் - குருவாயூரப்பன் நகர் ரோட்டில் மின்கம்பத்தை சுற்றியும் முட்புதர், செடிகள் படர்ந்து இருந்தது. 'தின மலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், மின் வாரியம் செடிகளை முழுமையாக அகற்றி விட்டது.

- ஜெயகணேஷ், குருவாயூரப்பன் நகர். (படம் உண்டு)

திருப்பூர், கணக்கம்பாளையம் பிரிவு நால்ரோட்டில் தெருவிளக்கு பகலிலும் எரிகிறது என 'தின மலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மறுநாளே விளக்கு அணைக்கப்பட்டு விட்டது.

- நமசிவாயம், கணக்கம்பாளையம் பிரிவு. (படம் உண்டு)






      Dinamalar
      Follow us