sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறுதானிய உற்பத்தி அதிகரிக்க திட்டம்; விவசாயிகளுடன் ஆலோசனை

/

சிறுதானிய உற்பத்தி அதிகரிக்க திட்டம்; விவசாயிகளுடன் ஆலோசனை

சிறுதானிய உற்பத்தி அதிகரிக்க திட்டம்; விவசாயிகளுடன் ஆலோசனை

சிறுதானிய உற்பத்தி அதிகரிக்க திட்டம்; விவசாயிகளுடன் ஆலோசனை


ADDED : ஜூலை 09, 2025 11:02 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்; தாராபுரத்தில் பயறுவகை, சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள் மற்றும் பருத்தி பயிரில், சாகுபடியை அதிகரிக்க செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

வேளாண்மை உதவி இயக்குனர் கணேசன், தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:

தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் பொருட்டு, பயறுவகை, தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் செயல் விளக்கம், புதிய ரகங்களுக்கு உற்பத்தி மற்றும் வினியோக மானியம், நுண்ணுாட்டச்சத்து, உயிர் உரங்கள், உயிரியியல் காரணிகள், உயிரியியல் பூச்சி மருந்து, அங்கக உரம், தார்பாலின், நானோ யூரியா, விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் மர வேம்பு பயிர் நடவு இனங்களில் மானிய உதவி வழங்கப்படுகிறது.

தாராபுரத்தில் நடப்பாண்டு, பயறு வகை, தானியங்கள், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் மற்றும் நிலக்கடலை பயிர்களில் சாகுபடி பரப்பை அதிகரிக்க, விளைச்சலை பெருக்க, வரப்பெற்றுள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது; திட்டங்களை பயன்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

கூட்டத்தில், தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட ஆலோசகர் அரசப்பன், துணை வேளாண்மை அலுவலர் செல்லமுத்து மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us