sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்; வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு 

/

போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்; வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு 

போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்; வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு 

போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்; வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு 


ADDED : ஜூன் 13, 2025 09:32 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 09:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

உடுமலை நகரில், போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்னையாக மாறி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள நகரத்தில், ரோட்டோரத்தில், தற்காலிக, நிரந்தர ஆக்கிரமிப்புகளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.

முக்கிய ரோடுகளின் இருபுறங்களிலும் அமைந்துள்ள கடைகளுக்கு, போதியளவு 'பார்க்கிங்' வசதி இல்லை.

எனவே, தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகள் குறிப்பிட்ட அளவு, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக, மாற்றப்படுகிறது. இதனால், ஏற்படும் நெரிசல், நகரப்பகுதியில், தொடர்கதையாக உள்ளது.

பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், முழுமையான தீர்வு கிடைப்பதில்லை. உதாரணமாக, நகரப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பட்டது.நகர எல்லையில் அமைந்துள்ள கொல்லம்பட்டரை பகுதியிலிருந்து கொழுமம் ரோடு சந்திப்பு வரை தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தப்பட்டு, சென்டர்மீடியனும் அமைக்கப்பட்டது.

மேலும், அப்போது, திருப்பூர், தாராபுரம் ரோடு சந்திப்பிலும், பஸ் ஸ்டாண்ட் சந்திப்பில், ரவுண்டானா அமைப்பதற்கான திட்ட வரைவு அனைத்து துறை ஆலோசனைகள் பெறப்பட்டு, தயாரிக்கப்பட்டது.

இதில், பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட் சந்திப்பில், ரவுண்டனா, அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நகர நுழைவாயிலாக அமைந்துள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினரை ஒருங்கிணைத்து, 'ரவுண்டனா' அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டு நர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.






      Dinamalar
      Follow us