ADDED : ஜூன் 12, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சீனிவாசன் அறிக்கை:
அகமதாபாத்தில் நேற்று நடந்த விமான விபத்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த கோர விபத்தில் இன்னுயிரை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, இறைவனை பிரார்த்திக்கிறோம்.
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் பூரண நலம்பெற வேண்டுகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரத்தில் பங்கெடுக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.