/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கை அன்னை வழிபாட்டுடன் 7,200 மரக்கன்று நடவு
/
இயற்கை அன்னை வழிபாட்டுடன் 7,200 மரக்கன்று நடவு
ADDED : ஜன 13, 2024 01:53 AM

திருப்பூர்;இயற்கை அன்னை வழிபாட்டுடன், வெள்ளகோவில் அருகே, 'சோலார் பிளான்ட்' வளாகத்தில், 7,200 மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணி நேற்று துவங்கியது.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், நடப்பு ஆண்டில், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன், பசுமை பயணம் துவங்கியது. இலக்கை எட்டிபிடிக்கும் துாரத்தில் இருப்பதால், புதிய கிராமங்களில் மரக்கன்று நட்டு வைக்கும் பணி துவங்கியுள்ளது.
வெள்ளகோவில் அடுத்துள்ள வேப்பம்பாளையத்தில், ஒரே இடத்தில், 7,200 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.'வீ ட்ரீ' சோலார் பிளான்ட் வளாகத்தில், நேற்று மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. மொத்தம், 7,200 மரக்கன்றுகள் நடும் பணி நேற்று துவங்கியது.
மரக்கன்று நடும் நிகழ்ச்சியில், திருப்பூரை சேர்ந்த சிவஜோதி ஸ்பின்னிங் மில்ஸ் உரிமையாளர் வெள்ளியங்கிரி, செல்வி வெள்ளியங்கிரி, 'சி.ஆர்., கார்மென்ட்ஸ்' ராமசாமி, 'தங்கமகன் பேஷன்' நாட்ராயன், திருமகள் மாடர்ன் ரைஸ் மில் சிதம்பரசாமி உள்ளிட்டோர் மரக்கன்று நட்டு வைத்தனர்.
இயற்கை அன்னைக்கும், பொன் விளையும் மண்ணுக்கும் முதல் மரியாதையும், வழிபாடும் செய்து, மரக்கன்றுகள் நடும் பணி துவக்கி வைக்கப்பட்டது. மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் முதன்மையாக விளங்கும், சோலார் களத்தில், மரக்கன்றுகள் நட்டு பசுமை வளர்க்கும் முயற்சியை பலரும் பாராட்டியுள்ளனர்.
'வனத்துக்குள் திருப்பூர்-9' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.