ADDED : நவ 11, 2025 11:15 PM

திருப்பூர்: மூலனுார் அடுத்துள்ள நத்தப்பாளையத்தில், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், மகோகனி மரக்கன்றுகள் நடப்பட்டன.
'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், நடப்பு ஆண்டில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போதுவரை, 2.35 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி மரக்கன்றுகள் நட, விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதன்படி, மூலனுார் அடுத்துள்ள நத்தப்பாளையம் சுவாமி பீட்ஸ் முத்துசாமிக்கு சொந்தமான தோட்டத்தில், மரக்கன்று நடப்பட்டன. மொத்தம், 200 மகோகனி மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.
இத்திட்டத்தில் மரக்கன்று வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

