sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'பிளீஸ்... மனைவியுடன் சேர்த்து வையுங்க!' 'டார்ச்சர்' செய்த போதை ஆசாமிக்கு 'காப்பு'

/

'பிளீஸ்... மனைவியுடன் சேர்த்து வையுங்க!' 'டார்ச்சர்' செய்த போதை ஆசாமிக்கு 'காப்பு'

'பிளீஸ்... மனைவியுடன் சேர்த்து வையுங்க!' 'டார்ச்சர்' செய்த போதை ஆசாமிக்கு 'காப்பு'

'பிளீஸ்... மனைவியுடன் சேர்த்து வையுங்க!' 'டார்ச்சர்' செய்த போதை ஆசாமிக்கு 'காப்பு'


ADDED : மே 20, 2025 06:55 AM

Google News

ADDED : மே 20, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : குடும்ப தகராறில் பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்குமாறு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்த டெய்லரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன், 39. அவர் மனைவி விமலா, 38. தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். சரவணன் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் டெய்லராக ் வேலை செய்து வருகிறார். நொச்சிபாளையம், அபிராமிநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களாக சரவணன் வேலைக்குச் செல்லாமலும், மது போதையில் வீட்டில் தகராறு செய்வதும் வாடிக்கையாக இருந்தது. இது குறித்து அவரின் மனைவி விமலா புகார் செய்வதும், போலீசார் அழைத்து விசாரித்து எச்சரித்து அனுப்புவதும் பல முறை நடந்துள்ளது. இதற்கிடையில், கடந்த இரு மாதம் முன், சரவணனின் தொல்லை தாளாமல் மகள்களுடன் சொந்த ஊருக்கு விமலா சென்று விட்டார்.

இதனால், விரக்தியில் இருந்த சரவணன், மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தன் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி பேசியுள்ளார்.தினமும் இதை ஒரு வேலை என்பது போல் சரவணன் தொடர்ந்து போலீசாரை 'டார்ச்சர்' செய்து வந்தார். நேற்று முன்தினம் மது போதையில் இது தொடர்பாக அவர் போலீசாரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார்.

ஒரு கட்டம் வரை பொறுமையாகப் பேசிய போலீசார், அவர் தொடர்ந்து கடுமையாக வாக்குவாதம் செய்த நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார், சரவணனை கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us