sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பிளஸ் 2 துணைத்தேர்வு; 518 பேர் விண்ணப்பம் 

/

பிளஸ் 2 துணைத்தேர்வு; 518 பேர் விண்ணப்பம் 

பிளஸ் 2 துணைத்தேர்வு; 518 பேர் விண்ணப்பம் 

பிளஸ் 2 துணைத்தேர்வு; 518 பேர் விண்ணப்பம் 


ADDED : மே 31, 2025 05:15 AM

Google News

ADDED : மே 31, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத, 518 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மே, 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகியது; 97.53 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர், மாநிலத்தில் மூன்றாமிடம் பிடித்தது. தேர்வெழுதிய, 25 ஆயிரத்து, 597 மாணவ, மாணவியரில், 385 மாணவர், 248 மாணவிகள் என, 603 பேர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை.

தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராத மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு ஜூன், 25 முதல் துணைத் தேர்வு நடத்தப்படுமென தேர்வுத்துறை அறிவித்தது. இத்தேர்வுக்கு மே, 14 முதல் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது; மே 29 ம் தேதி வரை மாவட்டத்தில், 518 பேர் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பிக்க தவறியவர்கள் இன்று (மே 31 ம் தேதி) தட்கல் திட்டத்தின் கீழ், கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. துணைத் தேர்வுகள் குறித்த விரிவான கால அட்டவணை மற்றும் கூடுதல் விபரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us