/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போக்குவரத்து நெரிசல் தடுக்க போலீஸ் கமிஷனர் ஆய்வு
/
போக்குவரத்து நெரிசல் தடுக்க போலீஸ் கமிஷனர் ஆய்வு
ADDED : அக் 19, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: தீபாவளி நெருங்கி வரும் நிலையில், திருப்பூர் நகரப் பகுதியில், ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் அலைமோதுகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தேவையான பகுதிகளில் பேரி கார்டு அமைத்தல், கண்காணிப்பு கோபுரம், கண்காணிப்பு கேமரா உள்ளிட்டடை அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், முக்கியமான கடை வீதி அமைந்த ரோடு, பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் போலீஸ் கமிஷனர் லட்சுமி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.