sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீஸ் டைரி

/

போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி


ADDED : பிப் 20, 2025 11:57 PM

Google News

ADDED : பிப் 20, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருவர் பலி


உடுமலை, பூளவாடியை சேர்ந்தவர் பாபு, 58. நேற்று தாராபுரத்திலிருந்து உடுமலைக்கு டூவீலரில் திரும்பி கொண்டிருந்தார். பொன்னாபுரம் அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த மற்றொரு டூவீலர் மோதியது. படுகாயமடைந்த பாபு பரிதாபமாக இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நகை, பணம் திருட்டு


திருப்பூர், காங்கயம் ரோடு, காங்கயம்பாளையம் புதுாரை சேர்ந்தவர் சகுந்தலா, 60. உடல் நலம் சரியில்லாமல், மகளுடன் மருத்துவமனைக்கு சென்றார். பின், வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டு பீரோவில் இருந்த, 5 சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது. தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

கணக்காளர் பலி


திருப்பூரை அடுத்த தாராபுரத்தை சேர்ந்தவர் சையத் சுகேல் அஹமத், 25; பனியன் நிறுவனத்தில் கணக்காளர். இவர் குண்டடம் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்த போது, ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த வேனின் பின்னால் கட்டுப்பாட்டை இழந்து டூவீலருடன் மோதினார். விபத்தில் படுகாயமடைந்த சையத் சுகேல் அஹமத் பரிதாபமாக இறந்தார். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us