sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீஸ் டைரி

/

போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி


ADDED : ஜன 06, 2024 12:42 AM

Google News

ADDED : ஜன 06, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோட்டில் குட்கா பொருட்கள்


பல்லடம் -- உடுமலை ரோடு வடுகபாளையம்புதுார் ஊராட்சி எல்லையில், மூட்டை நிறைய குட்கா பொருட்கள், ரோட்டில் சிதறி கிடந்தன. இதனை கைப்பற்றிய போலீசார் கூறுகையில், 'வாகனம் மூலம் கடத்திச் செல்லும் போது, போலீசாரிடமிருந்து தப்பிக்க வேண்டி ரோட்டில் வீசி சென்று இருக்கலாம். அல்லது, இப்பகுதியில் உள்ள ஏதாவது குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு வெளியே வீசி இருந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து விசாரித்து வருகிறோம்,' என்றனர்.

வாகன விபத்தில் பெண் பலி


பெருமாநல்லுார், கருக்கன்காட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், பனியன் தொழிலாளி. இவரின் மனைவி ஆஷா, 28. மகன் மவுலிஷ், 2 வயது. நேற்று காலை, மொபட்டில் மூவரும், திருப்பூர் ஐயப்பன் கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். பிச்சாம்பாளையம் பகுதியில், மாநகராட்சி குப்பை லாரி மோதியது. இதில், ஆஷா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற இருவரும், காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

குடும்ப தகராறில் தற்கொலை


ஊதியூர் அருகேயுள்ள எஸ்.வி., புரத்தை சேர்ந்தவர் அருண்பிரகாஷ், 38; இவரது மனைவி பனிமொழி, 31. இரு குழந்தைகள் உள்ளனர்.அடிக்கடி குடும்பத்தில் தகராறு இருந்துவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், பனிமொழி, துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us