பெண் தற்கொலை
காங்கயத்தை சேர்ந்தவர் சுமதி, 50. ராஜேந்திரன் என்பவருடன் முத்தணம்பாளையத்தில் வசித்து வந்தார். பெண்களுக்கு சுய உதவி குழு மூலமாக கடன் வாங்கி தந்தார். கடன் வாங்கியவர்களிடம் வாங்கி கட்ட முடியாமல், கடன் அதிகமானது. மனமுடைந்த சுமதி, காமநாயக்கன்பாளையம் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி தற்கொலை
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் சத்ருகன்குமார், 24; வெள்ளகோவிலில் நுால் மில்லில் தங்கி வேலை செய்து வந்தார். தனது குடும்பத்தினரை பிரிந்து இருக்கின்றேனே என்ற ஏக்கத்தில் இருந்தார். நேற்று முன்தினம் மில் வளாகத்தில் தங்கி இருக்கும் அறையில் துாக்குமாட்டி இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆண் சடலம் மீட்பு
திருப்பூர், வீரபாண்டி, கல்லாங்காட்டில் உள்ள பாறைக்குழி தண்ணீரில், 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதப்பதாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று விசாரித்தனர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

