நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழிலாளி தற்கொலை
திருப்பூர் : திருமுருகன்பூண்டி - ராக்கியாபாளையம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் கண்ணன், 41; பனியன் தொழிலாளி. நேற்று காலை வீட்டில் துாக்கு மாட்டி இறந்தார். வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டியிருந்தார். கடனை செலுத்த இயலாததால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கூறினர்.
நாய்க்குட்டி திருடியவர் கைது
திருப்பூர் : ஊதியூர், கொடுவாய், சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சரஸ்வதி, 65; வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் கதவை தட்டியுள்ளனர். சரஸ்வதி கதவை திறக்கவில்லை. அங்கு வந்த நபர், கதவை உடைக்க முயன்றார். பின், காலை எழுந்து பார்க்கும் போது, சேர் உடைக்கப்பட்டு, கட்டியிருந்த நாய் குட்டியை திருடி சென்றது தெரிந்தது. ஊதியூர் போலீசார் அப்பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி, 30 என்பவரை கைது செய்தனர்.

