ADDED : செப் 03, 2025 11:48 PM
அ நிறம் | அளவு
சிறுவன் மீது போக்சோ வழக்கு
காங்கயத்தை சேர்ந்தவர், 17 வயது சிறுவன். இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் கர்ப்பமானார். பெற்றோரின் புகாரின் பேரில், காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' வழக்கில் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பெண் சடலம் மீட்பு
ஊதியூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வஞ்சிபாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் நேற்று மதியம் பெண் சடலம் மிதந்து வந்தது. தகவலின் பேரில் போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். அதில், காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பூங்கொடி, 39 என்பதும், தோட்டத்து வேலை செய்து வந்ததும் தெரிந்தது. ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
